Friday, August 12, 2011


பிரபல நடிகை ருக்மணி தேவியின் கல்லறை இனந் தெரியாத குழுவினரால் நாசம்

                                                       கல்லறை உடைக்கப்படுமுன்னர்






சிங்களத் திரைப்பட நடிகையும் பாடகியுமான ருக்மணி தேவியின் கல்லறை உட்பட இனந் தெரியாத நபர்களால் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் உடைத்து அழிக்கப் பட்டுள்ளது.
நீர்கொழும்பு ,ஏத்துக்காலயில் உள்ள மாநகர சபையின் பொது மயான பூமிக்கு வந்த  இனந் தெரியாத குழுவினர் ருக்மணி தேவியின் கல்லறை , ருக்மணி தேவியின் சிலை, ருக்மணி தேவி நடித்த திரைப்படங்களின் பெயர் பட்டியல் உட்பட அவரது வாழ்க்கை குறிப்பு பொறிக்கப்பட்ட பெயர் படிகம், , கல்லறையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்பு சட்டவேலி என்பவற்றை உடைத்து நாசம் செய்து விட்டுச் தப்பிச் சென்றுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு நகர முன்னாள் மேயரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான ஆனந்த முனசிங்க உட்பட ஏழு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி லெஸ்லி ரூபானந்த் தெரிவித்தார்.

No comments:

Post a Comment