Thursday, February 25, 2010

நீர்கொழும்பு நிவ்ஸ்டட் மகளிர் கல்லூரி பாலர் விளையாட்டுப் போட்டி-2010

நிவ்ஸ்டட் மகளிர் கல்லூரியின் பாலர் பிரிவு மாணவிகளின் இல்ல விளையாட்டுப் போட்டி 25-2-2010 அன்று பாடசாலை அதிபரின் தலைமையில்பிற்பகல் ஒரு மணிக்கு காமச்சோடை சென். மேரிஸ் மைதானத்தில்நடைபெற்றது. நிகழ்விற்கு நீர்கொழும்பு மேயர் ஹேர்மன் குரேரா பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்

Sunday, February 14, 2010

ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமையைக் கண்டித்து கொழும்பில் நடந்த சத்தியாகிரகப் போராட்டம்

எதிரணிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்ட ஜெனரல்சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமையைக் கண்டித்தும் அவரை விடுதலை செய்யக் கோரியும் எதிர் கட்சிகளின் கூட்டணி 10-20-2010 அன்று கொழும்பு ஹல்ஸ்டாப் நீதி மன்ற வளவில் சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்தியது.
இதன்போது அங்கு திரண்ட குழுவினர் எதிர் கட்சிகளின் ஆதரவாளர்கள் மீது போத்தல்கள் கற்கள் மற்றும் பொல்லுகளை வீசி எறிந்து தாக்குதலை
மேற்கொண்டனர். இதற்கு எதிர் கட்சிகளின் ஆதரவாளர்கள் பதிலடி கொடுத்தபோது அக் குழுவினர் ஓடினர்.ஏற்பட்ட நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர பொலிஸார் கண்ணீர் புகைகுண்டு வீசியும் தண்ணீர் பீய்ச்சியும் அடித்தனர்.இச் சம்பவத்தின் போது இரு பொலிஸார் உட்பட
அறுவர் காயடைந்தனர்.







Monday, February 8, 2010

ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நீர்கொழும்பில் நடந்த ஆர்ப்பாட்டப் பேரணி

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 6-2-2010 அன்று நீர்கொழும்பில் கூட்டமும் ஆர்ப்பாட்டப் பேரணியும் துண்டுப்பிரசுர விநியோகமும் இடம் பெற்றது.எதிர்கட்சியினரும் சுதந்திரத்திற்கான அரங்கு அமைப்பினரும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தனர்,அதன் காட்சிகள் வருமாறு.

Monday, February 1, 2010

நீர் பறவைகள் - Water Birds


இலங்கை (கொழும்பு) மிருகக் காட்சி சாலையில் (ZOO) வாழும் நீர் பறவைகள் மாலை நேரத்தில் ஒன்று கூடி உணவு (மீன்கள்) வழங்கும் வண்டி வரும் வரை காத்திருப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளன. உணவு வழங்கும் வண்டியின் ஓசை கேட்டவுடன் அவைகள் பறந்தோடி வந்து உணவை அழகாக உண்கின்றன.இக்காட்சியை அனைவரும் பார்த்து வியக்கின்றனர்.அந்த வீடியோ காட்சிஇது.