எதிரணிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்ட ஜெனரல்சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமையைக் கண்டித்தும் அவரை விடுதலை செய்யக் கோரியும் எதிர் கட்சிகளின் கூட்டணி 10-20-2010 அன்று கொழும்பு ஹல்ஸ்டாப் நீதி மன்ற வளவில் சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்தியது.
இதன்போது அங்கு திரண்ட குழுவினர் எதிர் கட்சிகளின் ஆதரவாளர்கள் மீது போத்தல்கள் கற்கள் மற்றும் பொல்லுகளை வீசி எறிந்து தாக்குதலை
மேற்கொண்டனர். இதற்கு எதிர் கட்சிகளின் ஆதரவாளர்கள் பதிலடி கொடுத்தபோது அக் குழுவினர் ஓடினர்.ஏற்பட்ட நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர பொலிஸார் கண்ணீர் புகைகுண்டு வீசியும் தண்ணீர் பீய்ச்சியும் அடித்தனர்.இச் சம்பவத்தின் போது இரு பொலிஸார் உட்பட
அறுவர் காயடைந்தனர்.




No comments:
Post a Comment