Friday, May 28, 2010


ஆங்சான் சூகி உட்பட சகல அரசியல் கைதிளையும் விடுலை செய்!

மியன்மார் தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

மியன்மாரின் எதிர் கட்சித் தலைவி ஆங்சான் சூகி உட்பட சகல அரசியல் கைதிளையும் விடுலை செய்யுமாறு வற்புறுத்தி கொழும்பு-7 இல் அமைந்துள்ள மியன்மார் தூதரகம் முன்பாக 26-5-2010 அன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதனை இரன்டாம் உலக நண்பாகள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இதில் ஐக்கிய சோஷலிச கட்சித் தலைவர் சிறிதுங்க ஐயசூறிய ,மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள ,ஊடகவியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மியன்மாரில் தேர்தல் நடைபெற்று 20 வருடங்கள் நிறைவடைவதையிட்டு இந்த ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது

To release aung san suki and political jailers, ” friends of 2nd world” organization has prepared a picketing and it has held forward the Burma embassy at Colombo-7 on 26 may 2010.


Saturday, May 1, 2010

நீர்கொழும்பு கட்டுவையில் முச்சக்கர வண்டி மீது ரயில்​ மோதியதில்இருவர் பலி






நீர்கொழும்பு கட்டுவையில் பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முயன்ற முச்சக்கர வண்டி மீது ரயில்​ மோதியதில் இளம்பெண் ஒருவர் (29 வயது) சம்பவ இடத்தில் மரணமானதுடன் முச்சக்கர வண்டி சாரதி குருணாகல் வைத்திய சாலையில் பின்னர் மரணமானார். இச் சம்பவம் 30-4-2010 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றது.

வடபகுதியை சேர்ந்த இளம் பெண்ணே சம்பவத்தில் மரணமானவராவார் இவர் திருமணம் முடித்து 9 மாதமே ஆவதாகவும் நீர்கொழும்பு கட்டுவையில் கணவர் மற்றும் அம்மாவுடன் வசித்துவருவதாகவும், அம்மாவுடன் முச்சக்கர வண்டியில் செல்லும்பதே விபத்து இடம் பெற்றுள்ளதாகவும் தெரிய வருகிறது.

சம்பவத்தில் இறந்த முச்சக்கர வண்டி சாரதி தளுபத்தை பிதேசத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையாவார்.விபத்து சம்பவத்தைதொடர்ந்து பிதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட ஆயத்தமாயினர். பொலிசார் நிலமையை கட்டுப்படுத்தினர்.

இந்த பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இதற்கு முன்னர் இடம்பெற்ற விபத்துக்களில் பலர் மரணமாகியுள்மை குறிப்பிடத்தக்கது.