இலங்கையில் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல்

27-1-2010 அன்று மாலை தேர்தல் ஆணையாளரால் வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளின்படி 60 இலட்சத்து15 ஆயிரத்து 934 வாக்குகள் (6,015,934) பெற்று 57.88சதவீத) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ வெற்றிபெற்றார். எதிரணிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட்ட ஜெனரல்சரத் பொன்சேகா 41 இலட்சத்து 73 ஆயிரத்து 185 வாக்குகள் (4,173,185) பெற்று (40.15 வீதம்) இரண்டாமிடம் பெற்றார்.
இத்தேர்தலில் 18,42,749 மேலதிக வாக்குகளால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ வெற்றி பெற்றுள்ளார். தேர்தல் முடிவுகள் மக்களின் கருத்துக்களுக்கும் அவர்களின் விருப்பங்களுக்கும் உட்பபட்டதாக எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என எதிரணிகளின் பொது வேட்பாளர் ஜெனரல்சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசாரங்கள் பல நீர்கொழும்பிலும் இடம்பெற்றன. அதன்போது எடுக்கப்பட்ட படங்கள் இங்கு தரப்பட்டுள்ளன.
ஜெனரல் சாத் பொன்சோகாவின் பிரசாரக் கூட்டம்-கடோல்கலே மைதானம்




திருமதி அனோமா பொன்சேகா பெண்களுடனான ஒன்றுகூடல் நிகழ்வில்-உடன் இருப்பதுதிருமதி ஸானாஸ் ஹக்கீம்
ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன்
No comments:
Post a Comment